எதிர்காலத்தில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு பணியமர்த்துவதற்கு இஸ்ரேல் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப் பெற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
பலஸ்தீன மோதல்களினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.