நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஇ முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று முதல் வழமைபோல் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இன்றைய நாளுக்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.