செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை அஸ்வெசும பயனாளர்கள் இன்று (23) முதல் பெற்றுக் கொள்ளலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளி குடும்பங்களுக்காக 8571 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்தி முடிக்கவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.