• Sep 20 2024

மட்டக்களப்பில், சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Tamil nila / Feb 12th 2023, 5:11 pm
image

Advertisement

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான த.சஜித்தன் வயது (16) ச.தனு வயது (16) வீ.விதுசன் வயது (16) என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


களுவுந்தன் வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவிகளும் ஆசிரியர் ஒருவருமாக 8 பேர்கள் ஒன்றிணைந்து தாந்தாமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.இவர்கள் பயணம் செய்த தோணி கவிழ்ந்ததினால் இவ் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.இவர்களது சடலம் மீட்கப்பட்டுள்ளது.



குறித்த சம்பவம் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில், சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான த.சஜித்தன் வயது (16) ச.தனு வயது (16) வீ.விதுசன் வயது (16) என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.களுவுந்தன் வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவிகளும் ஆசிரியர் ஒருவருமாக 8 பேர்கள் ஒன்றிணைந்து தாந்தாமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.இவர்கள் பயணம் செய்த தோணி கவிழ்ந்ததினால் இவ் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.இவர்களது சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement