ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் மிருகங்களை கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமா என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இது எனக்கு சம்பந்தமான விடயம் அல்ல, வனவிலங்கு அமைச்சருக்குச் சொந்தமான விடயம்.
எனக்குத் தெரிந்த வரையில் இது தொடர்பாக மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் பூங்காவிலுள்ள மிருகங்களை கொன்று இறைச்சியாக்கி விற்பனை – எம்.பி அதிர்ச்சித் தகவல் samugammedia ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் மிருகங்களை கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமா என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இது எனக்கு சம்பந்தமான விடயம் அல்ல, வனவிலங்கு அமைச்சருக்குச் சொந்தமான விடயம்.எனக்குத் தெரிந்த வரையில் இது தொடர்பாக மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.