யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூளை காய்ச்சல் காரணமாக அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊறணி பகுதியைச் சோ்ந்த 4 வயதான அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயது சிறுமியே நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்துச் சுகயீனமடைந்துள்ளார்.
இந் நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.