தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (09) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரனும் , சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் உளவளத்துறை வைத்தியர் சிவதாஸ் , யாழ் பல்கலைக்கழக உளவளத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கஜவிந்தனும் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த கற்கைநெறிகளைப் பயிலவிருப்போருக்கான கருத்துரைகள் விருந்தினர்களால் எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.