• May 20 2024

இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்த இந்தியா...!samugammedia

Sharmi / Sep 2nd 2023, 9:55 am
image

Advertisement

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இந்திய – இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்த இந்தியா.samugammedia இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.இதனடிப்படையில், இந்திய – இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement