• May 12 2024

இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்த முயன்ற இந்தியர்கள் கைது

Chithra / Dec 15th 2022, 7:20 am
image

Advertisement

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்று டன் பீடி இலைகளுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது.


அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படை படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் பண்டல் பண்டலாக மூன்றுடன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் படகில் ஆறு மீனவர்களும் இருப்பது தெரிய வந்தது.


இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்  தூத்துக்குடியை சேர்ந்த அறுவர், மணப்பாடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டு படகுடன் ஆறு மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களிடம் விசாரணை நடத்தி  கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் மீனவர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்த முயன்ற இந்தியர்கள் கைது தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்று டன் பீடி இலைகளுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது.அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படை படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் பண்டல் பண்டலாக மூன்றுடன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் படகில் ஆறு மீனவர்களும் இருப்பது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்  தூத்துக்குடியை சேர்ந்த அறுவர், மணப்பாடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டு படகுடன் ஆறு மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களிடம் விசாரணை நடத்தி  கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் மீனவர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement