இந்தோனேஷியாவின் கடற்படைக் கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கிரி.ரேடன் ஏடி மாடாடினடா 331 எனப்படும் கப்பல் இன்று (19) முற்பகல் இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது.
இந்த போர்க்கப்பல் 105.02 மீற்றர் நீளம் கொண்டதுடன், 138 பேர் கொண்ட குழாமில் கட்டளை அதிகாரியாக கப்டன் நோப்ரியாடி எம்டியார் ஹன்லா பணியாற்றுவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.