இதுவரை மத்திய மாகாணத்தில் நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு வேதனத்தை வழங்குவதற்கான இயலுமை மத்திய மாகாண சபையிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி இதனை தெரிவித்தார்.
ஆவணங்களில் ஏற்பட்ட குறைப்பாடு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணிகளால் மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் நீண்ட காலமாக வழங்கப்படாதுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி தெரிவிக்கையில்,
அவர்களது வேதனத்தை வழங்குவதற்கான நிதி கிடைக்கப்பெறும் வழிமுறைகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர்களுக்கான நியமனங்களை வழங்க முடியும். இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த அமைச்சினது அனுமதி கிடைப்பதற்கே தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி குறிப்பிட்டார்.
ஆசிரிய உதவியாளர்களுக்கான வேதனம் தொடர்பில் வெளியான தகவல் samugammedia இதுவரை மத்திய மாகாணத்தில் நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு வேதனத்தை வழங்குவதற்கான இயலுமை மத்திய மாகாண சபையிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி இதனை தெரிவித்தார்.ஆவணங்களில் ஏற்பட்ட குறைப்பாடு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணிகளால் மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் நீண்ட காலமாக வழங்கப்படாதுள்ளன.இந்த விடயம் தொடர்பில், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி தெரிவிக்கையில்,அவர்களது வேதனத்தை வழங்குவதற்கான நிதி கிடைக்கப்பெறும் வழிமுறைகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இதன்மூலம் அவர்களுக்கான நியமனங்களை வழங்க முடியும். இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த அமைச்சினது அனுமதி கிடைப்பதற்கே தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொது நிர்வாக அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி குறிப்பிட்டார்.