நாட்டில் தற்போது உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்கள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் சில விடயங்களுக்கான விளக்கங்களை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஊழியர் சேமலாப நிதியத்தின் வைப்புத்தொகை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டார்.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் போது அந்த வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படும் 09 சதவீத வட்டி பாதிக்கப்படாது என்று அவர் அறிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.