உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருந்த மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவாரென தெரிவிக்கப்படுகிறது.
மேயர் வேட்பாளராக தாம் அறிவிக்கப்படுவார் என்று வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் அவர் போட்டியிலிருந்து விலகவுள்ளதாக அறியமுடிகிறது.
மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக விலகி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.