ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருடன் அல்ல என்றும் அவர்தான் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனவே அவருக்கு 'சல்யூட்' அடிப்பதற்கு தயங்கபோவதில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வுகளில் கடந்த காலத்தில் தாம் பங்கேற்கவில்லை எனவும், இம்முறை அதில் பங்கேற்கவுள்ளதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.