யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிட்டல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் குறித்த நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.யாழ். மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிட்டல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் குறித்த நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.