நெடுந்தீவு கொலைச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்தறிவு ஜீவனும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தில் 3 பெண்களும் இரு ஆண்களுமே கொலை செய்யப்பட்ட நிலையில் 100 வயது மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிற்சையில் உள்ளார்.
ஈவிரக்கமற்ற நபரின் இந்த கொடூர கொலை சம்பவத்தில் வீட்டினரின் நாயும் காயமடைந்திருந்தது. இந்த நிலையில் குறித்த நாய் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பில் 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நெடுந்தீவு கொலைச் சம்பவத்தில் ஐந்தறிவு ஜீவன் தொடர்பில் வெளியான தகவல் samugammedia நெடுந்தீவு கொலைச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்தறிவு ஜீவனும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.சம்பவத்தில் 3 பெண்களும் இரு ஆண்களுமே கொலை செய்யப்பட்ட நிலையில் 100 வயது மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிற்சையில் உள்ளார்.ஈவிரக்கமற்ற நபரின் இந்த கொடூர கொலை சம்பவத்தில் வீட்டினரின் நாயும் காயமடைந்திருந்தது. இந்த நிலையில் குறித்த நாய் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பில் 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.