• Sep 19 2024

தமிழர்களுடைய நிர்வாகத் திறனை யாழ் அரச அதிபர் பதவி வெளிப்படுத்துகிறது - அரச அதிபர் பிரதீபன்

Tamil nila / Jan 1st 2023, 6:39 pm
image

Advertisement

யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்து பதவி உயர்வு பற்றிய செல்லும் கணபதிப்பிள்ளை மகேசன் தமிழர்களுடைய நிர்வாகத்திறனின் அடையாளமாகவும் யாழ் மாவட்டத்தின் அடையாளமாகவும் விளங்குகிறார் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.


கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட  செயலகத்தில் இடம் பெற்ற அரசஅதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவு உபசார நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், நமது யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக செல்வது எமது யாழ் மாவட்டத்திற்கு மட்டுமல்ல யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருந்த போது பதவி உயர்வு பெற்று செல்வது எமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.


நமது அரச அதிபர் பதவி உயர்வு பெற்று செல்வது சந்தோசமான விடயமாக இருந்தாலும் அவருடைய காலத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமை ஆற்றிய மை எனக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.


ஏனெனில் ஒரு தந்தையிடம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கண்டிப்பில்லாத அரவணைப்பு அவரிடம் காணப்பட்ட சிறந்த குணமாகும்.


நிர்வாக  விடயங்களில் நேர்த்தியாகவும் அர்ப்பணிப்புத் தன்மையுடன் தனது தனிப்பட்ட சுகபோகங்களை புறந்தள்ளி மாவட்டத்திற்கு தன்னாலான பணியை ஆற்றியுள்ளார்.


மாவட்ட செயலகத்தின் கீழ் பணியாற்றும் எந்த ஒரு உத்தியோகத்தரையும் மனதளவில் கூட காயப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் அவரை உயர் பதவிக்கு இறைவன் அனுப்பியுள்ளார்.


அவருடன் பணியாற்றிய காலம் கொரோனா இடர் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் சாதுரியமாக தனது நிர்வாக விடையங்களை மேற்கொள்வார்.


உத்தியோத்தர் தொடர்பில் யாராவது முறைப்பாடுகள் தெரிவித்தால் சிரித்த முகத்துடன் அவர்களுக்கு அறிவுரை கூறி இனிமேல் இவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என கூறி அனுப்புவார் .


ஆகவே எமது மாவட்டத்தின் அரச அதிபர் அமைச்சின் செயலாளராக சென்றமை எமது மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாவட்ட செயலகத்திற்கும் பெருமை என அவர் மேலும் தெரிவித்தார்.


தமிழர்களுடைய நிர்வாகத் திறனை யாழ் அரச அதிபர் பதவி வெளிப்படுத்துகிறது - அரச அதிபர் பிரதீபன் யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்து பதவி உயர்வு பற்றிய செல்லும் கணபதிப்பிள்ளை மகேசன் தமிழர்களுடைய நிர்வாகத்திறனின் அடையாளமாகவும் யாழ் மாவட்டத்தின் அடையாளமாகவும் விளங்குகிறார் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட  செயலகத்தில் இடம் பெற்ற அரசஅதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவு உபசார நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நமது யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக செல்வது எமது யாழ் மாவட்டத்திற்கு மட்டுமல்ல யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருந்த போது பதவி உயர்வு பெற்று செல்வது எமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.நமது அரச அதிபர் பதவி உயர்வு பெற்று செல்வது சந்தோசமான விடயமாக இருந்தாலும் அவருடைய காலத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமை ஆற்றிய மை எனக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.ஏனெனில் ஒரு தந்தையிடம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கண்டிப்பில்லாத அரவணைப்பு அவரிடம் காணப்பட்ட சிறந்த குணமாகும்.நிர்வாக  விடயங்களில் நேர்த்தியாகவும் அர்ப்பணிப்புத் தன்மையுடன் தனது தனிப்பட்ட சுகபோகங்களை புறந்தள்ளி மாவட்டத்திற்கு தன்னாலான பணியை ஆற்றியுள்ளார்.மாவட்ட செயலகத்தின் கீழ் பணியாற்றும் எந்த ஒரு உத்தியோகத்தரையும் மனதளவில் கூட காயப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் அவரை உயர் பதவிக்கு இறைவன் அனுப்பியுள்ளார்.அவருடன் பணியாற்றிய காலம் கொரோனா இடர் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் சாதுரியமாக தனது நிர்வாக விடையங்களை மேற்கொள்வார்.உத்தியோத்தர் தொடர்பில் யாராவது முறைப்பாடுகள் தெரிவித்தால் சிரித்த முகத்துடன் அவர்களுக்கு அறிவுரை கூறி இனிமேல் இவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என கூறி அனுப்புவார் .ஆகவே எமது மாவட்டத்தின் அரச அதிபர் அமைச்சின் செயலாளராக சென்றமை எமது மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாவட்ட செயலகத்திற்கும் பெருமை என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement