2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதி விஷேட சித்திகளைப் பெற்றுள்ளார்.
அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற மாணவியான அபிவர்ஷினி மயூரன் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.