ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகத்தின் நினைவுத் தூபி திரை நீக்க விழா ஆஸ்பத்திரி வீதி, தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று (26) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
சிற்ப வடிவமைப்பாளர் கலைஞர் தவ.தஜேந்திரனால் வடிமைக்கப்பட்ட நினைவுத் தூபியை தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவர் ஓய்வுநிலை பேராயர் கலாநிதி சு.ஜெபநேசன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார்.
கிறிஸ்தவ மதகுருமாரால் ஆராதனை மேற்கொள்ளப்பட்டதுடன், நினைவுத் தூபிக்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் மலர்தூவியும் மெழுகுவர்த்தியை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இவற்றோடு இத் தூபியை வடிவமைத்த கலைஞரின் விளக்கவுரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருமார் , தந்தை செல்வா அறக்கட்டளை அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
யாழ்,தெல்லிப்பழையில் ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகத்தின் நினைவுத் தூபி திரை நீக்கம். samugammedia ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகத்தின் நினைவுத் தூபி திரை நீக்க விழா ஆஸ்பத்திரி வீதி, தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று (26) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.சிற்ப வடிவமைப்பாளர் கலைஞர் தவ.தஜேந்திரனால் வடிமைக்கப்பட்ட நினைவுத் தூபியை தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவர் ஓய்வுநிலை பேராயர் கலாநிதி சு.ஜெபநேசன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். கிறிஸ்தவ மதகுருமாரால் ஆராதனை மேற்கொள்ளப்பட்டதுடன், நினைவுத் தூபிக்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் மலர்தூவியும் மெழுகுவர்த்தியை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இவற்றோடு இத் தூபியை வடிவமைத்த கலைஞரின் விளக்கவுரையும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருமார் , தந்தை செல்வா அறக்கட்டளை அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.