• May 19 2024

சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்!

Tamil nila / Jan 8th 2023, 3:34 pm
image

Advertisement

சீனா பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான்


கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அலை தொடங்கிவிட்டதோ என்ற கவலைக்கு மத்தியில் சீனிஆ பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான். கோவிட் பரவல், சீனாவின் நடவடிக்கைகளை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? இந்த கேள்வி அனைவருக்கும் ஏற்படுவதற்கு காரணம் என்ன?


கொரோனா வைரஸ் சீனாவில் உற்பத்தியாகி, உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. 


சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. டோக்கியோ:  கோவிட் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் ஜப்பான் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.  


ஜப்பான் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் அனைவரும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ‘கோவிட் நெகட்டிவ்’ என்பதற்கான ஆதாரமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 


சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதிக அளவில் பரவக்கூடிய கோவிட் விகாரங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



ஹாங்காங் அல்லது மக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு பொருந்தாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.


சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் அல்லது ஜப்பானுக்கு வருவதற்கு முன் ஏழு நாட்களுக்குள் சீனாவிற்கு சென்றவர்களும் ஜப்பானுக்கு வரும்போது பி.சி.ஆர் அல்லது உயர்தர ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.


ஒரு சுற்றுலா பயணி ஜப்பானுக்கு வந்தவுடன், செய்யும் சோதனைகளில், கொரோனா பாசிடிவ் என்று முடிவுகள் வந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதிலும் அறிகுறிகள் இருப்பவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறியற்றவராக இருக்கும் கொரோனா பாசிடிவ் பயணிகள், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும்.  


முன்னதாக, ஹாங்காங் மற்றும் மக்காவ்விலிருந்து வருபவர்கள் நான்கு ஜப்பானிய விமான நிலையங்களுக்கு மட்டுமே வருமாறு ஜப்பான் ஏற்பாடுகளை செய்துள்ளது.


சீனா, இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல், நாட்டிற்கு வரும் பயணிகளுக்காக தனது எல்லைகளை திறந்தது. ஞாயிற்றுக்கிழமை, புதிய விதிகளின் கீழ் வரும் பயணிகளின் முதல் பிரிவு குவாங்சோ மற்றும் ஷென்சென் விமான நிலையங்களில் தரையிறங்கியதாக CGTN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிங்கப்பூர் மற்றும் டொராண்டோவிலிருந்து வந்த விமானத்தில் 387 பேர் இருந்தனர். இருப்பினும், வந்த பிறகு யாரும் கோவிட்-19 சோதனைகள் அல்லது ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை.

சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான் சீனா பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான்கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அலை தொடங்கிவிட்டதோ என்ற கவலைக்கு மத்தியில் சீனிஆ பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான். கோவிட் பரவல், சீனாவின் நடவடிக்கைகளை வைத்து முடிவு செய்யப்படுகிறதா இந்த கேள்வி அனைவருக்கும் ஏற்படுவதற்கு காரணம் என்னகொரோனா வைரஸ் சீனாவில் உற்பத்தியாகி, உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. டோக்கியோ:  கோவிட் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் ஜப்பான் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.  ஜப்பான் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் அனைவரும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ‘கோவிட் நெகட்டிவ்’ என்பதற்கான ஆதாரமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதிக அளவில் பரவக்கூடிய கோவிட் விகாரங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஹாங்காங் அல்லது மக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு பொருந்தாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் அல்லது ஜப்பானுக்கு வருவதற்கு முன் ஏழு நாட்களுக்குள் சீனாவிற்கு சென்றவர்களும் ஜப்பானுக்கு வரும்போது பி.சி.ஆர் அல்லது உயர்தர ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.ஒரு சுற்றுலா பயணி ஜப்பானுக்கு வந்தவுடன், செய்யும் சோதனைகளில், கொரோனா பாசிடிவ் என்று முடிவுகள் வந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதிலும் அறிகுறிகள் இருப்பவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறியற்றவராக இருக்கும் கொரோனா பாசிடிவ் பயணிகள், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும்.  முன்னதாக, ஹாங்காங் மற்றும் மக்காவ்விலிருந்து வருபவர்கள் நான்கு ஜப்பானிய விமான நிலையங்களுக்கு மட்டுமே வருமாறு ஜப்பான் ஏற்பாடுகளை செய்துள்ளது.சீனா, இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல், நாட்டிற்கு வரும் பயணிகளுக்காக தனது எல்லைகளை திறந்தது. ஞாயிற்றுக்கிழமை, புதிய விதிகளின் கீழ் வரும் பயணிகளின் முதல் பிரிவு குவாங்சோ மற்றும் ஷென்சென் விமான நிலையங்களில் தரையிறங்கியதாக CGTN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் மற்றும் டொராண்டோவிலிருந்து வந்த விமானத்தில் 387 பேர் இருந்தனர். இருப்பினும், வந்த பிறகு யாரும் கோவிட்-19 சோதனைகள் அல்லது ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement