• May 19 2024

கனேமுல்ல சஞ்ஜீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது! samugammedia

Tamil nila / Sep 14th 2023, 8:13 am
image

Advertisement

இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ எனப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளம் காத்மண்டு நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 182 ரக விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.

நடத்தை தொடர்பில் சந்தேகித்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவர் வைத்திருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.

இதன்படி, சேனாதீரர கருணாரத்ன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை அவர் வைத்திருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனேமுல்ல சஞ்ஜீவ மன்னாரில இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கனேமுல்ல சஞ்ஜீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது samugammedia இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ எனப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.நேபாளம் காத்மண்டு நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 182 ரக விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.நடத்தை தொடர்பில் சந்தேகித்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.இதன்போது, அவர் வைத்திருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.இதன்படி, சேனாதீரர கருணாரத்ன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை அவர் வைத்திருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.கனேமுல்ல சஞ்ஜீவ மன்னாரில இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement