கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது.
குறித்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அதிகார சபைகள், திணைக்களங்களை பிரதிநிதித்தும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.