கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் கலந்துகொண்டு அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான காப்புறுதி காசோலைகள் வழங்கி வைத்தார்.
இதன் போது கமநல காப்புறுதி சபையின் பணிப்பின் கீழ் வெள்ளம்,வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு அமைச்சரினால் காசோலைகளும், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தினுடைய 2 பேருக்கு காசோலைகளும் 3 பேருக்கு நெல் அவிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் விவசாய திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ் சுகந்தினி, கமநல சேவைகள் நிலைய உதவி பணிப்பாளர் தேவகரன், மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய பயனாளிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
கிளிநொச்சி விவசாயிகளுக்கு இழப்பீடு காசோலை வழங்கி வைப்பு samugammedia கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் கலந்துகொண்டு அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான காப்புறுதி காசோலைகள் வழங்கி வைத்தார்.இதன் போது கமநல காப்புறுதி சபையின் பணிப்பின் கீழ் வெள்ளம்,வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு அமைச்சரினால் காசோலைகளும், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தினுடைய 2 பேருக்கு காசோலைகளும் 3 பேருக்கு நெல் அவிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் விவசாய திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ் சுகந்தினி, கமநல சேவைகள் நிலைய உதவி பணிப்பாளர் தேவகரன், மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய பயனாளிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.