கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு புதிதாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட மருத்துவ கலாநிதி சேரலாதன் இன்று(28) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
இவர் முன்னர் அக்காரயன் வைத்தியசாலை பொறுப்பு வைத்தியராகவும்,கிளிநொச்சி மாவட்ட பதில் திட்டமிடல் வைத்திய அதிகாரியாகவும் நீண்டகாலம் பணியாற்றியவர்.
கடந்த சில காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைத் திணைக்களத்தினை பொறுப்பேற்றுள்ள இவர் மீண்டும் மாவட்ட சுகாதார சேவைகளை உயரிய நிலைக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது