தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி இன்று (06) காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.