19 அடி உயரமான அம்பேத்கர் சிலை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 1.3 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் அஹமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடாரே அம்பேத்கர் சிலையையும் உருவாக்கியுள்ளார். இந்தச் சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' (Satue of Equalty) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும்.
இந்த நினைவுச் சின்னம் அம்பேத்கரின் போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக திகழ உதவுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.