கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய நேற்று குறித்த பகுதியில் தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 43 பெரல்களும் அதில் 11825 போத்தல் கோடாவும், 28 லீற்றர் கசிப்பும் தருமபுரம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.