• Apr 27 2024

தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என்ற அம்பிட்டியவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா? சபையில் கொதித்தெழுந்த சாணக்கியன் samugammedia

Chithra / Nov 7th 2023, 1:23 pm
image

Advertisement


மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்கள் துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்துள்ளதுடன், என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன்.

அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்  இந்த பௌத்த  பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என்ற அம்பிட்டியவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா இல்லையா சபையில் கொதித்தெழுந்த சாணக்கியன் samugammedia மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்கள் துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்துள்ளதுடன், என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன்.அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்  இந்த பௌத்த  பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement