• May 17 2024

மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் நியமனம்...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 4:41 pm
image

Advertisement

மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கப்பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சி மற்றும் தொழிற்சங்க பிரிவில் பாரிய அளவிலான மாற்றங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் கட்சியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளராக காணப்பட்ட நிலையில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமினத்தின் பின்னர் கருத்து தெரிவித்த லெட்சுமனார் சஞ்சய்,

மலையக மக்கள் முன்னணியில் இளைஞரணியை திரம்பட கட்டியெழுப்புவேன்.வரும் காலம் அனைத்தும் இளைஞர்களின் கைளிலிலே உள்ளது சமூகத்தில் மாற்றங்களும் இளைஞர்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றது.

எனவே இளைஞரணி தலைவராக மலையகத்தில் என்னால் எவ்விதமாக செயற்பட முடியுமோ அவ்வாறு செயற்படுவேன்.

அதுமட்டுமல்ல இந்நேரத்தில் மலையக இளைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்.கலை,கல்வி,கலாச்சாரம்,விளையாட்டு,சுயத்தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் எம் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களை அத்துறையில் வளர்த்துவிட பல வேலைத்திட்டங்களை வரும் காலங்களில் வகுக்க உள்ளோம்.எனவே அனைத்து இளைஞர்களும் ஒன்றாக இணைவோம் நாம் யாரென்பதை நாட்டிற்கு எடுத்து காட்டுவோம் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் நியமனம்.samugammedia மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கப்பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.இதன்போது கட்சி மற்றும் தொழிற்சங்க பிரிவில் பாரிய அளவிலான மாற்றங்கள் இடம்பெற்றன.இந்நிலையில் கட்சியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளராக காணப்பட்ட நிலையில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமினத்தின் பின்னர் கருத்து தெரிவித்த லெட்சுமனார் சஞ்சய், மலையக மக்கள் முன்னணியில் இளைஞரணியை திரம்பட கட்டியெழுப்புவேன்.வரும் காலம் அனைத்தும் இளைஞர்களின் கைளிலிலே உள்ளது சமூகத்தில் மாற்றங்களும் இளைஞர்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றது.எனவே இளைஞரணி தலைவராக மலையகத்தில் என்னால் எவ்விதமாக செயற்பட முடியுமோ அவ்வாறு செயற்படுவேன்.அதுமட்டுமல்ல இந்நேரத்தில் மலையக இளைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்.கலை,கல்வி,கலாச்சாரம்,விளையாட்டு,சுயத்தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் எம் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களை அத்துறையில் வளர்த்துவிட பல வேலைத்திட்டங்களை வரும் காலங்களில் வகுக்க உள்ளோம்.எனவே அனைத்து இளைஞர்களும் ஒன்றாக இணைவோம் நாம் யாரென்பதை நாட்டிற்கு எடுத்து காட்டுவோம் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement