• May 02 2024

யாழிலிருந்து இரகசியமான முறையில் திருமலைக்கு கொண்டுசெல்லப்படும் சுண்ணக்கல்...! சிறிதரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு...!

Sharmi / Apr 19th 2024, 2:12 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக  திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்  அதிர்ச்சித் தகவலை  வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

யாழிலிருந்து இரகசியமான முறையில் திருமலைக்கு கொண்டுசெல்லப்படும் சுண்ணக்கல். சிறிதரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக  திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்  அதிர்ச்சித் தகவலை  வெளியிட்டுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement