பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையில் குறித்த செயற்பாடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 25 மெட்ரிக் டன் அல்லது அதற்கும் குறைவாக நெல்லை அரைக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு இவ்வாறு கடன் தொகை வழங்கப்படவுள்ளது.