• Apr 26 2024

கனேடிய கரையோர நகரமொன்றில் 31 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி?

Tamil nila / Feb 1st 2023, 9:27 pm
image

Advertisement

கனடாவின் கரையோர நகரமான கேப் பிரிடோனில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 31 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளார்.


லொட்டோ மெக்‌ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பாரிய பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.


நோவா ஸ்கோட்டியா மற்றும் கனேடிய கரையோரப் பகுதிகளில் இதுவரையில் வென்றெடுக்கப்பட்ட அதி கூடிய பரிசுத் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.


அட்லாண்டிக் கனடா பகுதியில் 2018ம் ஆண்டில் 60 மில்லியன் டொலர் லொத்தர் சீட்டிலுப்பு பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமையே இதுவரையில் வெல்லப்பட்ட அதி கூடிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றியீட்டியவர் யார், எங்கு இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 


கனேடிய கரையோர நகரமொன்றில் 31 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி கனடாவின் கரையோர நகரமான கேப் பிரிடோனில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 31 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளார்.லொட்டோ மெக்‌ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பாரிய பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.நோவா ஸ்கோட்டியா மற்றும் கனேடிய கரையோரப் பகுதிகளில் இதுவரையில் வென்றெடுக்கப்பட்ட அதி கூடிய பரிசுத் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.அட்லாண்டிக் கனடா பகுதியில் 2018ம் ஆண்டில் 60 மில்லியன் டொலர் லொத்தர் சீட்டிலுப்பு பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமையே இதுவரையில் வெல்லப்பட்ட அதி கூடிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றியீட்டியவர் யார், எங்கு இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement