இந்து சமய அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றமைக்கு எதிராக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் எதிர்காலத்தில் எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பு அதன் மூலம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமான முன்னாயர்த்தக் கலந்துரையாடலொன்று யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்று மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி.சார் பிரதிநிதிகளுடன் சிவில் சமூக அமைப்பினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.