கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த பெண்ணின் இரண்டு கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இப்பெண் தாய் தந்தையை சிறுவயதிலே இழந்தவர் என்பதும் தெரியவருகின்றது.
குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.