கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ,ஒருவரின் உடமையில் இருந்து 900 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் 15000 ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.
அத்துடன் சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி, ஜஸ் போதப்பொருள் பயன் படுத்தும்போது படமாக்கப்பட்ட இறுவெட்டு (CD ) ஆகியவையும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் இன்றைய தினம் 07.12.2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்