ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த, நபர் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை அவர் துவிச்சக்கர வண்டியுடன் குளத்தினுள் விழுந்து உயிரிழந்தார்.
ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒரவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.