• Sep 20 2024

ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட நபர்..! - காரணம் பொலிஸாரா? samugammedia

Chithra / May 8th 2023, 10:41 pm
image

Advertisement

கல்கமுவ - அம்பன்பொல பகுதியில் ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக கல்கமுவ காவல் துறையினர் தெரிவித்தனர்.

கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் பாய்ந்து விபரீத முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் 16 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் ஒரு கட்டமாக தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் வீட்டிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சோதளை நடவடிக்கைகள் நிறைவடைந்து சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த நபர் தொடரூந்தில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் காவல் துறையினரின் நடவடிக்கை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் மாய்த்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட நபர். - காரணம் பொலிஸாரா samugammedia கல்கமுவ - அம்பன்பொல பகுதியில் ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக கல்கமுவ காவல் துறையினர் தெரிவித்தனர்.கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் பாய்ந்து விபரீத முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார்.கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் 16 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.விசாரணைகளின் ஒரு கட்டமாக தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் வீட்டிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சோதளை நடவடிக்கைகள் நிறைவடைந்து சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த நபர் தொடரூந்தில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் அவர் காவல் துறையினரின் நடவடிக்கை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிர் மாய்த்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement