வடமாகாணத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரகளை உள்ளடக்கி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இடம் பெற்ற லீக் முறையீலான கடினபந்து கிரிக்கட் சுற்று போட்டியில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாது இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது மன்னார் AA சுப்பர் கிங் அணி
வடமாகாணத்தில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடினபந்து சுற்றுபோட்டியானது கடந்த ஒரு மாத காலமாக வடமாகணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் வீரர்களை ஏல முறையில் கொள்வனவு செய்து யாழ் மாவட்டத்தில் இடம் பெற்றது.
குறித்த சுற்றுபோட்டியானது லீக் முறையில் இடம் பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிளிநொச்சி Bulls அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5/11/2023) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இறுதிப்போட்டி இடம் பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி Bulls முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்த நிலையில், கிளிநொச்சி Bulls அணி தமது இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் AA சுப்பர்கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்து குறித்த சுற்றுத்தொடரை கைப்பற்றியதுடன் இரண்டு இலட்சம் பணப்பரிசையும் பெற்று கொண்டது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த சட்டத்தரனி இளங்குமரன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதே நேரம் குறித்த சுற்றுத்தொடரில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய மன்னாரை சேர்ந்த பறுனாந்து அருள் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதையும், சுற்றுப்போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த சட்டத்தரணி மணிவண்ணன் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கிரிக்கட் சம்பியனானது மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி samugammedia வடமாகாணத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரகளை உள்ளடக்கி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இடம் பெற்ற லீக் முறையீலான கடினபந்து கிரிக்கட் சுற்று போட்டியில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாது இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது மன்னார் AA சுப்பர் கிங் அணி வடமாகாணத்தில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடினபந்து சுற்றுபோட்டியானது கடந்த ஒரு மாத காலமாக வடமாகணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் வீரர்களை ஏல முறையில் கொள்வனவு செய்து யாழ் மாவட்டத்தில் இடம் பெற்றது. குறித்த சுற்றுபோட்டியானது லீக் முறையில் இடம் பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிளிநொச்சி Bulls அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5/11/2023) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இறுதிப்போட்டி இடம் பெற்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி Bulls முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்த நிலையில், கிளிநொச்சி Bulls அணி தமது இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் AA சுப்பர்கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்து குறித்த சுற்றுத்தொடரை கைப்பற்றியதுடன் இரண்டு இலட்சம் பணப்பரிசையும் பெற்று கொண்டது. இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த சட்டத்தரனி இளங்குமரன் தெரிவுசெய்யப்பட்டார். அதே நேரம் குறித்த சுற்றுத்தொடரில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய மன்னாரை சேர்ந்த பறுனாந்து அருள் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதையும், சுற்றுப்போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த சட்டத்தரணி மணிவண்ணன் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.