• May 19 2024

பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: விசேட காவல்துறை குழு நியமனம்! samugammedia

Tamil nila / Sep 17th 2023, 7:12 am
image

Advertisement

சீதுவ - கிரிந்திகொட பிரதேசத்தில் பயணப்பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் காணப்பட்ட பையிலிருந்து வெற்று போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொல்லப்பட்டு பயணப் பையில் வைத்து தடுகங் ஓயாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பயணப் பையில் இருந்து நபரொருவரின் கை தென்படுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு நிற மேல் சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்திருந்த குறித்த நபர் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திரங்கள் கொண்ட பச்சை குத்தியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட குறித்த சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: விசேட காவல்துறை குழு நியமனம் samugammedia சீதுவ - கிரிந்திகொட பிரதேசத்தில் பயணப்பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் காணப்பட்ட பையிலிருந்து வெற்று போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நபர் கொல்லப்பட்டு பயணப் பையில் வைத்து தடுகங் ஓயாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.குறித்த பயணப் பையில் இருந்து நபரொருவரின் கை தென்படுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சிவப்பு நிற மேல் சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்திருந்த குறித்த நபர் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திரங்கள் கொண்ட பச்சை குத்தியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட குறித்த சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement