யாழ்.மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் அதிகரிப்பால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநகர சபை மட்டும் தனித்து செயலாற்ற முடியாததுடன், சமகாலப் பகுதியில் அனைத்து பிரதேச சபைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை உள்ளிட்ட சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தொகையை கூடுதலாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென டக்லஸ் தேவாநந்தா தெரிவித்தார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் கால்நடைகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்த நிலையில், தனக்கும் இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உரிய ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார்.
யாழில் கட்டாக்காலி நாய்களின் அதிகரிப்பால் ஏற்படும் பல விபத்துக்கள். - கட்டுப்படுத்த நடவடிக்கை samugammedia யாழ்.மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் அதிகரிப்பால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநகர சபை மட்டும் தனித்து செயலாற்ற முடியாததுடன், சமகாலப் பகுதியில் அனைத்து பிரதேச சபைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுவரை காலமும் இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை உள்ளிட்ட சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தொகையை கூடுதலாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென டக்லஸ் தேவாநந்தா தெரிவித்தார்.இதேவேளை யாழ் மாவட்டத்தில் கால்நடைகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்த நிலையில், தனக்கும் இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உரிய ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார்.