• May 09 2024

10 லட்சம் தந்தால் மட்டுமே தாம்பத்யம் - அட்வான்ஸ் 5 லட்சம் வாங்கியும் தொடமறுத்த கணவர்..!samugammedia

Sharmi / May 20th 2023, 11:05 am
image

Advertisement

புதிதாக திருமணம் செய்த நபர் ஒருவர் 10 லட்சம் ரூபாய் தந்த பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடுவேன் என தனது புது மனைவியிடம் அடம் பிடிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிலிபித் நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கும் படான் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி  திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த திருமணத்திற்கு  மணமகள் வீட்டார் 20 லட்சம் செலவழித்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் 10 லட்சம் ரூபாய் தந்த பின்னரே தாம்பத்ய உறவினை வைத்து கொள்வேன் என மனைவியிடம்  கூறியுள்ளார்.

இதனால், முதல் நாள் இரவிலேயே மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நிலை, அடுத்த 3 மாதங்களுக்கும் நீடித்தமையால் பொறுமையிழந்த மனைவி தனது வீட்டுக்கு தெரிவிக்க அவரது தாயார் மருமகனிடம் தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளதுடன், பாலியல் பிரச்சனைகள் எதுவும் இருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் என கூறியுள்ளார்.

ஆனால், 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் அதன் பின்பே ஹனிமூனுக்கு செல்வேன் என்றும் மருமகன்   அடம் பிடித்த நிலையில், மணமகள் வீட்டார் 5 லட்சம் ரூபாயினை வழங்கியுள்ளனர்.

பின்னர், அந்த ஜோடி நைனிடாலுக்கு ஹனிமூன் சென்ற போதிலும்,  அவர்களிடையே தாம்பத்ய உறவு எதுவும் நடக்கவில்லை.

மாறாக அந்த  நபர் மனைவியின் ஆபாச புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்து கொண்டு மீதி தொகையை கேட்டு மிரட்டியதுடன், இல்லையெனில் அதனை வைரலாக்கி விடுவேன் என்றும் கூறி சைக்கோ போன்று, அச்சுறுத்தியுள்ளார்.

இதனால், மிரண்டு போன அந்த பெண், தனது வீட்டாரிற்கு  நடந்தவற்றை கூறி அழுதமையால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் தந்தால் மட்டுமே தாம்பத்யம் - அட்வான்ஸ் 5 லட்சம் வாங்கியும் தொடமறுத்த கணவர்.samugammedia புதிதாக திருமணம் செய்த நபர் ஒருவர் 10 லட்சம் ரூபாய் தந்த பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடுவேன் என தனது புது மனைவியிடம் அடம் பிடிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிலிபித் நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கும் படான் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி  திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்கு  மணமகள் வீட்டார் 20 லட்சம் செலவழித்துள்ளனர். இந்நிலையில், மேலும் 10 லட்சம் ரூபாய் தந்த பின்னரே தாம்பத்ய உறவினை வைத்து கொள்வேன் என மனைவியிடம்  கூறியுள்ளார்.இதனால், முதல் நாள் இரவிலேயே மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலை, அடுத்த 3 மாதங்களுக்கும் நீடித்தமையால் பொறுமையிழந்த மனைவி தனது வீட்டுக்கு தெரிவிக்க அவரது தாயார் மருமகனிடம் தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளதுடன், பாலியல் பிரச்சனைகள் எதுவும் இருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் என கூறியுள்ளார்.ஆனால், 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் அதன் பின்பே ஹனிமூனுக்கு செல்வேன் என்றும் மருமகன்   அடம் பிடித்த நிலையில், மணமகள் வீட்டார் 5 லட்சம் ரூபாயினை வழங்கியுள்ளனர். பின்னர், அந்த ஜோடி நைனிடாலுக்கு ஹனிமூன் சென்ற போதிலும்,  அவர்களிடையே தாம்பத்ய உறவு எதுவும் நடக்கவில்லை. மாறாக அந்த  நபர் மனைவியின் ஆபாச புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்து கொண்டு மீதி தொகையை கேட்டு மிரட்டியதுடன், இல்லையெனில் அதனை வைரலாக்கி விடுவேன் என்றும் கூறி சைக்கோ போன்று, அச்சுறுத்தியுள்ளார். இதனால், மிரண்டு போன அந்த பெண், தனது வீட்டாரிற்கு  நடந்தவற்றை கூறி அழுதமையால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement