இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளின் அளவினை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அதிகரிகள் குழுவொன்று இந்தியாவிற்கு
விஜயம் மேற்கொண்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்தியாவில் 03 கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், அது போதாது உள்ளதாகவும் எனவே மேலும் சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னைக்கு பறந்த அதிகாரிகள் குழு – நாளை வெளியாகவுள்ள புதிய அறிவிப்பு samugammedia இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளின் அளவினை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அதிகரிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது, இந்தியாவில் 03 கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், அது போதாது உள்ளதாகவும் எனவே மேலும் சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது