யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மூவருக்கு கிளிநொச்சி பொலிசாரினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோரை விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.