இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது,
சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை – முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.9 என அறிவிக்கப்பட்டது – இது உள்ளூர் நேரப்படி காலை 11:53 மணிக்கு ஏற்பட்டது.