பண்டாரவளை- பூனாகலை. கபரக்கலை பெருந்தோட்டத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இரண்டு லயன் தொடர் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த பகுதியில் இருந்து 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பூனாகலை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ் அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன், ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிய மண் சரிவு இரு லயன் தொடர் குடியிருப்புகள் பாதிப்பு SamugamMedia பண்டாரவளை- பூனாகலை. கபரக்கலை பெருந்தோட்டத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் இரண்டு லயன் தொடர் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்த பகுதியில் இருந்து 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பூனாகலை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இவ் அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.அத்துடன், ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.