• May 20 2024

கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு நடவடிக்கை! மின்சார சபை ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 27th 2023, 9:17 am
image

Advertisement

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் (27.02.2023) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த போராட்டம் காலை 10.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் இருந்து மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க முக்கியஸ்தர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மின்சார சபை ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு SamugamMedia இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் (27.02.2023) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.இந்த போராட்டம் காலை 10.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நாடு முழுவதும் இருந்து மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க முக்கியஸ்தர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement