மாத்தறை தியலபே தென்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பின் படி மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மண்சரிவு காரணமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.