திருகோணமலை - பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாயமான கடற்றொழிலாளி மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலை கடற்தொழிலுக்காகச் சென்ற மூதூர் - பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்கிற மீனவர் இன்று காலை வரை கரைதிரும்பாமை மற்றும் அவரது தொலைபேசி இயங்காமை போன்ற காரணங்களினால் போலீஸ் கடற்படை பிரதேச செயலாளர் போன்றோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் கடற்றொழில் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டது.
எனினும் சீனன்வெளி மீனவர் சங்கத்தினர் கடற் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் மேற் கொண்ட தேடுதலின் பயனாக இன்று சனிக்கிழமை மாலை அவர் பயன்படுத்திய நங்கூரமறுந்து ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லப் பட்ட போது திரும்பி வருவதற்கு எரிபொருளின்றி தவித்த வேளையில் ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோலர் படகால் காப்பாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
இருப்பினும் உணவு நீரின்மையாலும் கடுமையான கடல் சீற்றத்தாலும் பாதிப்புற்று சோர்வடைந்திருந்த அம்மீனவர் 1990 அவசர அம்பூலன்ஸ் சேவை மூலமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் காணாமல் போன மீனவர் மீட்பு samugammedia திருகோணமலை - பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாயமான கடற்றொழிலாளி மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாலை கடற்தொழிலுக்காகச் சென்ற மூதூர் - பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்கிற மீனவர் இன்று காலை வரை கரைதிரும்பாமை மற்றும் அவரது தொலைபேசி இயங்காமை போன்ற காரணங்களினால் போலீஸ் கடற்படை பிரதேச செயலாளர் போன்றோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் கடற்றொழில் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டது.எனினும் சீனன்வெளி மீனவர் சங்கத்தினர் கடற் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் மேற் கொண்ட தேடுதலின் பயனாக இன்று சனிக்கிழமை மாலை அவர் பயன்படுத்திய நங்கூரமறுந்து ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லப் பட்ட போது திரும்பி வருவதற்கு எரிபொருளின்றி தவித்த வேளையில் ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோலர் படகால் காப்பாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.இருப்பினும் உணவு நீரின்மையாலும் கடுமையான கடல் சீற்றத்தாலும் பாதிப்புற்று சோர்வடைந்திருந்த அம்மீனவர் 1990 அவசர அம்பூலன்ஸ் சேவை மூலமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.