இந்திய
அமைதிப்படைகளிற்கு எதிராக சாத்வீக போராட்டமான உண்ணாவிரத போராட்டத்தின்
மூலம் உயிர்நீத்த அன்னை பூபதியின் 35 வது நினைவுதினம் யாழ் பல்கலையின்
பிரதான தூபி வளாகத்தில் இன்று(19) பிற்பகல் 1மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்
பொழுது அன்னை பூபதியம்மாவின் நினைவுருவ படத்திற்கு ஈகை சுடரேற்றப்பட்டு
ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.
நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா
விஜயகுமார், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சிவ்வெஸ்டார்
ஜெல்சின், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள்,ஊழியர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.