தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் கிளிநொச்சியில் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச் சேவை சந்தை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.